டாக்சி ஒன்றின் மீது மோதிய கார், நார்த் பிரிட்ஜ் ரோட்டின் பெயர்ப் பலகையைத் தாங்கும் கம்பம் ஒன்றை நேற்று முன்தினம் ( சனிக்கிழமை ஜூலை 20ஆம் தேதி) இடித்துத் தள்ளியது.
ஓஃபிர் ரோட்டுக்கும் நார்த் பிரிட்ஜ் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் காரும் டாக்சியும் ஒன்றோடு ஒன்று மோதிய தகவல் அதிகாலை 1.03 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது. டாக்சி ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சேதமடைந்த டாக்சியைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.