வேலைவாய்ப்பு முகவை நிறுவன உரிமையாளருக்கு 17,300 வெள்ளி அபராதம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு முகவை நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவருக்கு 17,300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர் இழப்பீடு கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த உரிமதாரர் குலாப் சிங், அளவுக்கு அதிகமாக வேலைவாய்ப்புக் கட்டணத்தை வசூலித்ததுடன் முறையான ரசீதுகளைக் கொடுக்காமல் இருந்தார். மேலும், வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகத் தன்னை நாடிவந்த வெளிநாட்டவர்களிடம் கூறி அவர்களிடம் பணத்தை அவர் பெற்றதையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையே வெளிநாட்டு ஊழியர்கள் இருவரிடம் 51 வயது சிங் மொத்தம் 1,664 வெள்ளியை அளவுக்கு அதிகமாக வாங்கியதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. மற்றொரு வெளிநாட்டு ஊழியருக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து அவரிடமிருந்து 5,284 வெள்ளியைப் பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கின் வேலை முகவை நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத்தை மீறும் முதலாளிகளையும் தனிநபர்களையும் தெரிந்த பொதுமக்கள் தன்னிடம் www.mom.gov.sg என்ற இணையத்தளம் வழியாகத் தெரிவிக்க மனிதவள அமைச்சு ஆலோசனை விடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!