சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகச் சேர விரும்புபவர்களுக்கு $200,000 ரொக்க மானியம் வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்தார்.
இம்மானியத் திட்டத்திற்குச் சேவை தொடர்பில் எவ்வித நிபந்தனையோ பிணைப்பு ஒப்பந்தமோ இருக்காது. ஆனால் மானியத் தொகையை முழுமையாகப் பெற்றுக்கொள்ள கல்வியாளர்கள் மொத்தம் நான்கு ஆண்டுகள் சேவை ஆற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூரர்களாக இருக்க, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வசிக்கும் தகுதியுடைய சிங்கப்பூரர்களை இத்திட்டம் ஈர்க்கவல்லது என்று எதிர்பார்க்கப்படுகிறது.