கனரக வாகன விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது

மரணத்தை விளைவித்த கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு குறைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் கடந்த ஆண்டு 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு மாண்டோரின் எண்ணிக்கை 34ஆக பதிவாகியிருந்தது.

எனினும், கனரக வாகனங்களால் நிகழ்ந்த விபத்துகளின் மூலம் காயமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு, அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்புநோக்க சற்று அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் 1,174 பேர் காயமடைந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு அந்த எண்ணிக்கை 1,143ஆக இருந்தது.

போக்குவரத்து போலிஸ், நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் விபத்துகள் தொடர்பான புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டன.

கனரக வாகனங்களைக் கண்மூடித்தனமாக செலுத்தும் ஓட்டுநர்கள்மீது நடவடிக்கை எடுப்பதே அதிகாரிகளின் நோக்கம்.

வேக வரம்பை மீறியது, பாதுகாப்பு இருக்கைவார் அணியாதது, விரைவுச்சாலையில் இடது தடத்தைப் பயன்படுத்தத் தவறியது போன்ற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 25 கனரக வாகன ஓட்டுநர்களுக்கு

26 அழைப்பாணைகள் வழங்கப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான புகையை வெளியேற்றிய கனரக வாகனம் ஒன்றுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் அபராதக் கடிதம் கொடுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!