சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய நிறுவனர் கொங் ஹீ சிறையிலிருந்து விடுதலை

சிங்கப்பூர்: சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலயத்தை நிறுவிய கொங் ஹீ, பல மில்லியன் வெள்ளி தேவாலய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை முடிந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) விடுதலையானார்.

திரு கொங் “தனது குடும்பத்தோடு, குறிப்பாக வயதான பெற்றோரோடு” நேரம் செலவிடுவதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொள்வார்” என தேவாலயத்தின் சபையும் மூத்த நிர்வாகமும் தேவாலய இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு கொங்கின் 55வது வயதுக்கு ஒருதினம் முன்பாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேவாலய நிதியிலிருந்து 50 மில்லியன் வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்திய ஆறு தேவாலயத் தலைவர்களில் திரு கொங்குக்கே ஆக நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது மேல்முறையீட்டின்போது எட்டு ஆண்டுகாலச் சிறைத் தண்டனை மூன்றரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

திரு கொங் தனது தண்டனைக் காலத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைக் கைதிகளுக்கு நன்னடத்தைக்காக மூன்றில் ஒரு பகுதி தண்டனைக்காலம் குறைக்கப்படுவது வழக்கம். திரு கொங் தவிர, தேவாலயத்தின் மற்ற தலைவர்களின் தண்டனைக்காலமும் குறைக்கப்பட்டது. அவர்களில் நால்வர் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டனர்.

மூன்று ஆண்டுகளும் நான்கு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சியூ எங் ஹான் சிங்கப்பூரிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதால், அவரது தண்டனைக் காலம் 13 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அவரே கடைசியாக விடுதலையாவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!