பொது இடத்தில் 14 வயது மாணவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட 35 வயது ஆசிரியருக்கு செப்டம்பர் 3ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அந்த ஆசிரியர் இப்போது $10,000 பிணையில் இருக்கிறார்.
சென்ற ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோடு அருகே இந்தக் காரியத்தை அந்த ஆசிரியர் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவி அது பற்றி பிறகு வேறு ஓர் ஆசிரியரிடம் கூறியதை அடுத்து இந்த விவகாரம் போலிசுக்குப் போனது.
வயது குறைந்த பெண்ணிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதை அந்த ஆசிரியர் ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட யாருடைய பெயரையும் வெளியிட முடியாது.
இதனிடையே, அந்த ஆசிரியர் சென்ற செப்டம்பர் மாதம் பள்ளிக்கூடத்தைவிட்டு நீக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.