கணக்குப் பதிவியல் துறைக்கு மின்னிலக்க வழிகாட்டி நெறிமுறை

சிங்கப்பூரின் கணக்குப் பதிவியல் தொழில்துறையைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொண்டு அதிக உற்பத்தித்திறனையும் போட்டித்திறனையும் வளர்த்துக்கொள்ள உதவுவதற்காக ஒரு வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

‘கணக்குப் பதிவியல் தொழில்துறை மின்னிலக்கத் திட்டம்’ என்று குறிப்பிடப்படுகின்ற அந்த வழிகாட்டி நெறிமுறை, இத்தகைய நிறுவனங்கள் மின்னிலக்கமயத்திற்கு மாறிக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாவது நிதி அமைச்சருமான இந்திராணி ராஜா நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். கணக்குப் பதிவியல் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 98 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னிலக்கமயம், புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக பொருளியலின் வடிவமே மாறுகிறது என்றும் இந்தச் சூழலில் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்கும் வகையில் கணக்குப் பதிவியல் தொழில்துறையினர் தங்களுடைய ஆற்றல்களை மிகவும் விரைவாக மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று குமாரி இந்திராணி ராஜா வலியுறுத்தினார்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளைத் தழுவிக்கொள்ள உதவியாக சென்ற ஆண்டு $2.4 மில்லியன் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு உதவ புதிய வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!