மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வங்கிகளுடன் செயல்படும் போலிசாரின் மோசடி தடுப்பு நிலையம்

மோசடிகளுடன் தொடர்புள்ள சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளை இப்போது சில நாட்களுக்குள் முடக்கிவிட முடியும். சிங்கப்பூர் போலிஸ் படைக்கும் இங்குள்ள மூன்று பெரிய வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாடு இதற்கு வழிவகுக்கிறது.

பணமாற்றுகளை இவ்வாறு தடுப்பதன்வழி, மோசடிக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு உண்டாக்கி, மோசடிக்கு இலக்காவோரின் இழப்புகளைக் குறைப்பது போலிசாரின் மோசடி தடுப்பு நிலையத்தின் இலக்கு.

மோசடி தடுப்பு நிலையம் ஜூன் 18ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதுவரை மின்-வணிக மோசடிகள், கடன் மோசடிகள் தொடர்பாகச் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் போலிஸ் புகார்கள் நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மோசடியுடன் தொடர்புள்ள 815 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மோசடிகளில் பறிகொடுக்கப்பட்ட 2.4 மில்லியன் வெள்ளியில் சுமார் 850,000 வெள்ளியை அல்லது 35 விழுக்காட்டை மீட்பதற்கு இது வழிவகுத்தது.

மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் கைபேசி எண்களைத் துண்டிப்பதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடும் நிலையம் சேர்ந்து செயல்படும். அதோடு, மோசடிக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக “பயன்மிக்க நடவடிக்கைகளையும்” கண்டறியும்.

நிலையத்தின் அமைவிடம் இவ்வாண்டு பிற்பகுதியில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!