வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்த தொடக்கநிலை நான்கு முதல் ஆறு வரை பயிலும் மாணவர்கள் மின்னிலக்கத் திறன்களைப் பெற வகை செய்யும் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
‘மை டிஜிட்டல் பூட்கேம்ப்’ என்று அழைக்கப்படும் இத்திட்டம், மின்னிலக்க எதிர்காலத்தை நோக்கி சிங்கப்பூர் செல்லும் வேளையில் வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்று.
டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளியில் நேற்று (செப்டம்பர் 3) நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்துகொண்டார்.
“நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பிள்ளைகள் அனைவரும் எதிர்கால மின்னிலக்கச் சூழலில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார் அவர்.