எஸ்பி குழுமம் தீவு முழுவதும் 200 வாகன மின்னேற்றி நிலையங்களை அமைத்து இருக்கிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் அது அமைத்திருந்த இத்தகைய நிலையங்க ளுடன் ஒப்பிடுகையில் இப்போதைய நிலையங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாகும். அந்த 200 நிலையங்களில் டிசி மின்சாரத்தை வேகமாக ஏற்றும் 52 நிலையங்களும் அடங்கும் என்று நேற்று எஸ்பி குழுமம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அடுத்த ஆண்டு வாக்கில் இத்தகைய 1,000 நிலையங் களை அமைப்பது இலக்கு. அவற்றில் 250 நிலையங்கள் அதிவேகமாக மின்சாரத்தை ஏற்றும் வசதியுடன் இருக்கும். ஆர்ச்சர்ட் ரோடு செல்லும் மின்சார வாகனங்கள் ஷா செண்டரில் இருக்கும் மின்னேற்றி நிலையத்தில் தங்கள் கார்களுக்கு மின்சாரத்தை ஏற்றிக்கொள்ள முடியும்.