சக்கர நாற்காலி போன்ற தனிநபர் நடமாட்ட உதவி வண்டியில் சென்ற ஓர் ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தானியங்கி கண்ணாடிக் கதவு ஒன்றின் மீது மோதியதில் அந்தக் கதவு உடைந்து விழுந்தது.
மருத்துவமனையின் புளோக் 5 கூடத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என மருத்துவமனை தெரிவித்தது.
வளாகத்துக்குள் செல்லும்போது கவனமாக இருக்குமாறு தனிநபர் நடமாட்ட உதவி வண்டிகளைப் பயன்படுத்துவோரை மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது.