டாக்சி மோதி முதியவர் மரணம்

அலெக்சாண்ட்ரா ரோட்டிலுள்ள ‘இக்கியா’ கடைக்கு அருகே டாக்சியால் இடிக்கப்பட்ட 77 வயது முதியவர் கடந்த சனிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

ஓய்வுபெற்ற டாக்சி ஓட்டுநரான திரு ஓ ஆ லெக், தமது குடும்பத்தாருடன் இக்கியா கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். அருகிலுள்ள சாலை ஒன்றைத் திரு லோ கடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கடையின் வாகனக் காத்திருப்பு இடத்திலிருந்து ஒரு டாக்சி வெளிவந்து அவரை மோதியதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தெலுக் பிளாங்கா ரோட்டை நோக்கிச் செல்லும் அலெக்சாண்ட்ரா ரோட்டில் டாக்சிக்கும் பாதசாரிக்கும் இடையிலான விபத்து குறித்து கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணி வாக்கில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த முதியவர் பின்னர் உயிரிழந்தார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

திரு ஓ, விபத்தின்போது டாக்சியின் அடியில் சிக்கிக்கொண்டதாக அவரது மனைவி 76 வயது திருவாட்டி லாம் காம் யாம் வான்பாவ்விடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!