ஊட்ரம் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தார் அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததை அடுத்து அந்த வீட்டில் சடலம் ஒன்று கிடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சின் சுவீ ரோடு புளோக் 52ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாண்டவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்று வான்பாவ் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர். மாண்ட ஆடவர், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த வீட்டுக்குள் குடிபெயர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.