காலையில் அதிகரித்த புகைமூட்டம்; ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

காலை வேளையில் வேலைக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் போன்றவர்கள் புகைமூட்டத்திலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

தீவின் தென்பகுதியில் புதன்கிழமை அன்று ( செப்டம்பர், 18 ) அதிக புகைமூட்டம் நிலவியதாகவும் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அப்பகுதியில் 122 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டது. வடக்குப் பகுதியில் அந்த அளவு 107 ஆகப் பதிவாகியிருந்தது.

நேற்று இரவு நேரத்தில் புகைமூட்டத்தின் அளவு அதிகரித்ததன் எதிரொலியாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மலேசியாவில் கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகள் மூடல்:

அண்டை நாடான மலேசியாவில் புகைமூட்ட நிலவரம் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதால் அங்கு அதிக எண்னிக்கையிலான பள்ளிகள் புதன்கிழமை (செப்டம்பர், 18) மூடப்பட்டன. சரவாக்கில் 281 தொடக்கப்பள்ளிகளும் 56 உயர்நிலைப்பள்ளிகளும் இன்று மூடப்பட்டன. சுமார் 138,300 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் ஒன்பது மாவட்டங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ அம்மானில் காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) அதிகபட்சமாக 354ஐத் தொட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!