தற்போதுள்ள தனிப்பட்ட அஞ்சல்பெட்டிகள் மறைந்துபோகும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, கடிதங்களையும் பொட்டலங்களையும் விநியோகிக்கும் விவேக அஞ்சல்பெட்டிகள் விரைவில் அறிமுகமாகவிருக்கின்றன என்று சிங்போஸ்ட் நிறுவனம் நேற்று கூறியது.
புதிய விவேக அஞ்சல்தலைகள், புதிய அஞ்சல்பெட்டியின் செயல்முறைகள் நேற்று விளக்கப்பட்டன.
இதன் மூலம் காணமல்போகும் மற்றும் அனுப்பப்படாத கடிதங்கள் தொடர்பான சம்பவங்கள் குறையும். அத்துடன் அஞ்சல் விநியோகச் சேவை இதன் மூலம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
அனுப்பப்பட்ட தங்கள் கடிதங் கள் எந்த விநியோக நிலையில் உள்ளன என்பதை சிங்கப்பூர் குடி யிருப்பாளர்கள் கண்காணிக்க லாம். கடிதங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் அது குறித்து அனுப்புநருக்குத் தெரிவிக்கப்படும்.
கடிதத்தைப் பெறுநர் முக அடையாளத்தைக் காட்டியும் இதர அடையாள முறையைப் பயன்படுத்தியும் விவேக அஞ்சல்பெட்டியிலிருந்து கடிதங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கப்பட்டது.
விவேக அஞ்சல் தலைகளில் உள்ள தரவுக் குறியீடுகளில் அனுப்புநர், பெறுநர் ஆகியோரின் விவரங்கள் இருக்கும்.
விவேக அஞ்சல்பெட்டிகளில் தபால்காரர்களால் சேர்ப்பிக்கப்படும் கடிதங்கள் தரவுக் குறியீட்டின் மூலம் பிரிக்கப்பட்டு, சேமித்து வைக்கப்படும்.
இது உலகில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய சிங்போஸ்ட் நிறுவனத்தின் அஞ்சல் சேவைகள் பிரிவின் தலைவரும் தலைமை நிர்வாகியு மான திரு வின்சென்ட் பாங், இந்தப் புத்தாக்க முறைகள் அஞ்சல் சேவையின் எதிர்காலத்துக்கு ஏற்ப சிங்கப்பூர் உருவாக்கியுள்ள அணுகு முறை என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு பாங், விவேக அஞ்சல் பெட்டியின் அறிமுகம் பற்றி சம் பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கி றது என்றும், ஆனால் இப்போதைக்கு எந்த உறுதியான முடிவும் இல்லை என்றும் சொன்னார்.
இந்தப் புதிய விவேக அஞ்சல் பெட்டியின் உருவாக்கத்துக்கு சிங் போஸ்ட் செலவழித்திருக்கும் தொகை பற்றியும் இத்திட்டத்தை தீவு முழுவதும் அறிமுகப்படுத்த எவ்வளவு தொகை செலவாகும் என்றும் திரு பாங் தெரிவிக்க வில்லை.
“இந்தத் தொழில்நுட்பம் சந்தை யில் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒரு முழுமையான இயந்திரமாக உருவாக்கி, பணியில் ஈடுபடுத்து வதுதான் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்றும் திரு பாங் குறிப்பிட்டார்.