லிட்டில் இந்தியாவில் உரிமம் இன்றி பணம் அனுப்பியதன் தொடர்பில் எண்மர் கைது

லிட்டில் இந்தியாவில் உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுடன் போலிசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் $47,000 ரொக்கம், கைபேசிகள், பணம் அனுப்பிய பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக நேற்று (செப்டம்பர் 24) போலிசார் தெரிவித்தனர்.

கைதான 30 முதல் 54 வயதுக்குட்பட்ட எட்டு ஆடவர்களும் போலிஸ் விசாரணையில் தற்போது உதவி வருகின்றனர்.

உரிமம் இல்லாமல் நடத்தப்படும் பணம் அனுப்பும் வர்த்தகங்கள் பண மோசடி அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி போன்றவற்றுக்குக் காரணமாக அமையக்கூடும் என போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் உரிமம் பெற்ற பணம் அனுப்பும் முகவர்கள் அல்லது வங்கிகளை நாடுமாறு அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

ஒருவர் உரிமம் இன்றி பணம் அனுப்பும் வர்த்தகம் புரிவதாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $100,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தால் அவர் அந்த வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் தலா $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!