இந்திய ஊழியரின் மரணத்துக்குக் காரணமான நிறுவனத்துக்கு $190,000 அபராதம்

தனது ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய துப்புரவு மற்றும் பசுமைவனப்பு நிறுவனத்துக்கு நேற்று (செப்டம்பர் 24) $190,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு மரத்தை வெட்டும் வேலையைத் தனது வெளிநாட்டு ஊழியரான சின்னையா கணேசனிடம் செய்ய சொன்ன சின் எங் கிளீனிங் சர்வீசஸ், ஊழியருக்குப் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மரத்தின் ஒரு பகுதியை வெட்டுவதற்கு சங்கிலிரம்பத்தை சின்னையா பயன்படுத்தினார். அப்போது வெட்டப்பட்ட மரத்தின் பகுதி அவர் மீது விழுந்தது.

மரத்திலிருந்து அவர் கீழ் நோக்கி விழுந்தாலும் அவர் அணிந்திருந்த பாதுகாப்பு வார் ஒரு பொருளில் மாட்டிக் கொண்டதால் சின்னையா அந்தரத்தில், தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து சின்னையா கீழே இறக்கப்பட்டார். ஆனால், அவரது நெஞ்சுப் பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் ஏற்பட்ட காயங்களால் அவர் மாலை 4.20 மணிக்கு மரணமடைந்தார்.

புக்கிட் தீமாவில் உள்ள 62 கியாம் ஹோக் ரோட்டில் உள்ள காலி இடத்தில் இருந்த ஆறு மரங்களை வெட்டும் பொறுப்பு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அங்குதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.

செய்யும் வேலையில் எந்த வகையான அபாயங்கள் நிகழக்கூடும் என்று ஆராயாமலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலும் சின் எங் நிறுவனம் ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்தது மனிதவளச் சட்டத்தின்படி அது இழைத்த குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!