செங்காங், பொங்கோல் எல்ஆர்டி பாதையில் ரயில் சேவைத் தடை

செங்காங், பொங்கோல் எல்ஆர்டி பாதைகளில் நேற்று ரயில் சேவைத் தடை ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரு ரயில் பாதைகளும் முடங்கியதாக காலை 6.08 மணி அளவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் டுவிட்டரில் பதிவு செய்தது.

எல்ஆர்டி ரயில் சேவைத் தடையால் காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்களும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

சேவைத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது.

காலை 7 மணி அளவில் பொங்கோல் எல்ஆர்டி ரயில் பாதையில் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது. ஒரு மணி நேரம் கழித்து, செங்காங் எல்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.

சேவைத் தடையின்போது நிலையங்களுக்கு இடையே இருந்த ரயில்களில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் 50 வயது முஸ்தஃபா ஸைனுதீனும் ஒருவர். அதிகாலை 5.35 மணிக்கு ரென்ஜோங் நிலையத்தில் எல்ஆர்டி ரயிலில் ஏறிய அவர் காலை 7.55 மணிக்கு செங்காங் நிலையத்தில் இறங்கினார்.

“ரயிலுக்கு உள்ளே இருட்டாக இருந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு குளிர்சாதன வசதியில்லாமல் தவித்தோம்,” என்றார் திரு ஸைனுதீன். வேலைக்குத் தாமதமானதால் அவர் விடுப்பு எடுத்து வீடு திரும்பினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!