டைம்ஷேர் ரிக்கவரி மோசடி மூலம் 16 பேரை ஏமாற்றி கிட்டத்தட்ட $200,000 அபகரித்த விற்பனையாளருக்கு 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்மீது சுமத்தப்பட்ட ஒன்பது மோசடிக் குற்றச்சாட்டுகளை 35 வயது முகம்மது ஹெரியாந்தோ அப்துல் ஹமீது ஒப்புக்கொண்டதாக போலிசார் தெரிவித்தனர். அவருக்கு எதிராக மேலும் 19 மோசடிக் குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த மோசடிக் குற்றங்கள் 2012ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நிகழ்ந்தன.
டைம்ஷேர் முதலீட்டு உறுப்பியத் திட்டங்களிலிருந்து வெளியேற உதவ டைம்ஷேர் சொத்து மேம்பாட்டாளர்கள் தம்மை நியமனம் செய்ததாகப் பொய்க் கூறி அந்த 16 பேரை முகம்மது ஹெரியாந்தோ நம்பவைத்தார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பணத்தை மீட்டுத் தருவது முடியாத காரியம் என்று தெரிந்தும் பணத்தைத் திரும்ப பெற்றுவிடலாம் என்று முகம்மது ஹெரியாந்தோ ஆசைக்காட்டியதாக போலிசார் தெரிவித்தனர்