புக்கிட் பாத்தோக் வீட்டில் தீ; மருத்துவமனையில் ஆடவர், குழந்தை

புக்கிட் பாத்தோக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வரும் ஆடவர், மேல்மாடியில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று (அக்டோபர் 8) காலை 10.40 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4ல் உள்ள புளோக் 416ன் ஐந்தாவது மாடியில் தீப்பற்றியது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்து நிகழ்ந்த சமயத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று மின்னேற்றப்பட்டது தெரியவந்தது. அந்தச் சாதனம் UL2272 தரச் சான்றிதழ் பெற்றிருந்ததா என்பது தெரியவில்லை.

எனவே, UL2272 தரச் சான்றிதழ் பெறாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை அப்புறப்படுத்திவிடுமாறும் பயன்படுத்த வேண்டாமெனவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

இந்த ஆண்டின் முதல் பாதியில், மொத்தம் 49 தீச்சம்பவங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!