14,000 வெள்ளி மதிப்பிலான ஆபரணங்களைத் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஒரு பணிப்பெண், தனது இந்திய இனத்து முதலாளியிடமிருந்து கிட்டத்தட்ட 14,000 வெள்ளி மதிப்பிலான ஆபரணங்களைக் களவாடினார். 33 வயது ஜெனிஃபர் பரண் கம்போவாவுக்கு எதிரான மூன்று திருட்டுக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு நேற்று எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

கம்போவா, 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 48 வயது கிருத்திகா ராதாகிருஷ்ணனின் வீட்டில் பணிபுரியத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி ராதாகிருஷ்ணன் தமது ஆபரணங்களைச் சொந்தப் படுக்கை அறையிலுள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் வைத்திருந்தார். பலமாகக் பூட்டப்பட்டிருந்த அந்தப் பெட்டிகளிலிருந்து அந்தப் பணிப்பெண் எப்படி ஆபரணங்களை எடுத்தார் என்பது தெளிவாக இல்லை.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருவாட்டி ராதாகிருஷ்ணன் தனது ஆபரணங்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்தபோது கம்போவாவின் திருட்டு அம்பலமானது. அப்போதும்கூட கம்போவா டிசம்பர் மாதத்தில் 180 வெள்ளி மதிப்புள்ள ஒரு ஜோடி தோடுகளைக் களவாடினார்.

கம்போவா இவ்வாண்டு மே மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தனக்காக வாதாட வழக்கறிஞர் இல்லாத கம்போவா, குடும்ப வறுமையின் காரணமாகத் தாம் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!