மோட்டார்சைக்கிள், டிரெய்லர் வாகனம், தனியார் பேருந்து ஆகியவை மோதிய விபத்தில் காயமடைந்த 20 பேர் மூன்று வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட்தீமா விரைவுச்சாலையில் ஞாயிறு நள்ளிரவு 1.38 மணி அளவில் நடந்த அந்த விபத்தில் காயமடைந்த எட்டு வயது முதல் 68 வயது வரையிலான 20 பேரும் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.