சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அனைத்துலக சட்டம் மிகவும் அவசியமானது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்த 11வது எஸ். ராஜரத்தினம் விரிவுரையை நேற்று ஆற்றிய திரு மேனன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக சட்டம் சிறிது சிறிதாக மழுங்கிபோய் விட்டது. மேலும் அந்தச் சட்டத்தை உள்நாட்டு அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருந்தது.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நேற்று அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள், கல்வியாளர்கள் என 850 பேர் முன்னிலையில் பேசிய திரு மேனன், “எதிர்மறைப் பிரிவுகளாக மாறிவரும் உலகச் சூழலை எதிர்கொள்ள வேண்டுமானால், சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கையின் ஐந்து தூண்களாக இணக்கம், தற்காப்பு, அரசதந்திரம், சட்டப் பூர்வத்தன்மை, நிலைத்தன்மை ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும்,” என்றார்.