எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை 825ல் சக்கர நாற்காலி வசதி

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் இன்னும் எளிதான முறையில் பேருந்தில் ஏற முடியும்.

இயோ சூ காங் பேருந்து நிலையத்திற்கும் லெண்டோர் பகுதிக்கும் இடையே பேருந்துச் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி 825-ல், சக்கர நாற்காலியைத் தூக்கிவிடும் தானியக்க இயந்திர முறை பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திர முறையைச் செயல்படுத்துவதற்கு ஏறக்குறைய மூன்று நிமிடங்கள் எடுக்கும்.

முன்னதாக, சக்கர நாற்காலியில் செல்வோர் இப்பேருந்துச் சேவையைப் பயன்படுத்த முடியாது. எலெக்ட்ரிக் ரக சிறிய பேருந்தான இதன் நீளம் எட்டு மீட்டர்.

இந்த மாற்றத்தின் மூலம், சிங்கப்பூரில் இயக்கப்படும் சுமார் 5,800 பேருந்துகளில் 99 விழுக்காடு, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதற்கு உகந்தவை என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சக்கர நாற்காலிகளைப் பேருந்துகளில் ஏற்றக்கூடிய தானியக்க இயந்திர முறை பொருத்தப்பட்ட சேவை எண் 825-ன் நான்கு சிறிய எலெக்ட்ரிக் பேருந்துகள் நேற்று தொடங்கி கட்டங்கட்டமாக அறிமுகம் காணும்.

இதற்கிடையே, 2017ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து இயோ சூ காங் பேருந்து நிலையத்தில் பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுப் போக்குவரத்து முறையைப் பசுமைமிக்கதாகவும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகவும் ஆக்குவதே மேம்பாட்டுப் பணிகளின் நோக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!