3,000 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் பறிமுதல்

துவாஸ் சோதனைச்சாவடியில் கடந்த சனிக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையே 3,000க்கும் அதிகமான கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சிகரெட்டுகளுக்காக மொத்தம் $310,000க்கும் அதிகமான பொருள், சேவை வரி செலுத்தப்படவில்லை. இந்த சிகரெட்டுகள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து மற்றும் கனரக வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. இரு வாகனங்களும் வெவ்வேறு தினங்களில் சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்டன.

இரு சம்பவங்களின்போதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழ, அந்த வாகனங்களைக் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் நடந்த முதல் சம்பவத்தில், பேருந்தின் கீழ்ப்பகுதியில் 925 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டன.

அந்தப் பேருந்தை 28 வயது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டினார். அந்தப் பேருந்தில் பயணிகள் சிலர் இருந்தனர். கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இரண்டாவது சம்பவம் நடந்தது.

அப்போது, கனரக வாகனம் ஒன்றின் கொள்கலனின் மேற்கூரையில் 2,278 கள்ள சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வாகனத்தை 29 வயது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டினார்.

இவ்விரு சம்பவங்களின் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்கள், கூடுதல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். நீதிமன்றத்திலும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!