‘திடலுக்குள் இறங்கிய ரசிகர்கள் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டனர்’

அண்மையில் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டங்களின்போது திடலுக்குள் அத்துமீறி இறங்கிய ரசிகர்கள் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளையாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரேசிலுக்கும் செனகலுக்கும் இடையே நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தின்போது ரசிகர்கள் சிலர் திடலுக்குள் இறங்கியது குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விளையாட்டு மையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் திடலுக்கும் பார்வையாளர் இருக்கைகளுக்கும் இடையே உள்ள பகுதிக்கு விரைந்தார்.

உஸ்பெகிஸ்தான் ரசிகர்களை முற்றுகையிட்ட அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திடலில் அத்துமீறி இறங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு சம்பவங்களைத் தான் கடுமையாகக் கருதுவதாக விளையாட்டு மையம் தெரிவித்தது.

விளையாட்டாளர்கள், ரசிகர்களின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமை என்றும் அரங்கிற்குள் நுழையும் எல்லாரும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அது குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!