பூத்துக்குலுங்கும் சாலையோர மரங்கள்

ஜப்பானின் சக்கூரா பூக்களைப் போலத் தோற்றமளிக்கும் சிங்கப்பூரிலுள்ள டிரம்பெட் மரங்களின் இளஞ்சிவப்பு மலர்கள், இந்த மாதம் திடீரென மலர்ந்தன.

பொதுவாகச் சாலையோரங்களில் காணப்படும் இந்த மரங்களின் மலர்கள் செப்டம்பர் மாதத்தின் முடிவுக்குள் மலர்வதை நிறுத்திவிடும். ஆனால் இம்முறை அக்டோபரின் முதல் இரண்டு வாரங்களுக்கும் மரங்கள் தொடர்ந்து பூக்கின்றன. வழக்கத்திற்கு மாறான பருவநிலையே இதற்குக் காரணம் என தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

நீண்ட காலத்திற்குப் பருவநிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் இருந்து பின்னர் கடும் மழை பெய்யும்போது டபெபுயா ரோசியா என்ற இந்த மரங்களில் பூக்கள் மலரத் தொடங்குவதாகப் பூங்காக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.

மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையிலும் ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையிலும் அந்த மரங்கள் மலர்வதாகப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் 15,000 டிரம்பெட் மரங்கள் நட்டுவைக்கப்பட்டுள்ளன. பொங்கோல் பூங்கா, பீஷான்-அங் மோ கியோ பூங்கா மற்றும் சிங்கப்பூர் ரிவர் புரொமனேட் ஆகிய இடங்களில் இந்த மரங்களைப் பொதுமக்கள் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!