கடந்த வார இறுதியில் நிகழ்ந்த குடியிருப்பாளருக்கும் பாதுகாவல் அதிகாரிக்கும் இடையிலான சம்பவத்திற்கும் அந்தக் கூட்டுரிமை வீட்டின் பாதுகாவல் நிறுவனச் சேவைகள் நிறுத்தப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று சிங்கப்பூர் பாதுகாவல் சங்கம் தெளிவுபடுத்தி உள்ளது.
கே.எச். பாதுகாவல் நிறுவனத் தின் அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மற்றோர் இடத்தில் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
“எய்ட் ரிவர் சுவீட்ஸ் கொண் டோவில் கே.எச். பாதுகாவல் நிறுவனத்தின் பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அதன் ஊழியர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு விட்டது,” என்று பாதுகாவல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் திரு ஸ்டீவ் டான் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று முன்தினம் அந்த கொண்டோவுக்கு சென்றபோது, கே.எச். பாதுகாவல் நிறுவனத்துக்குப் பதிலாக ‘அல் பைன்’ பாதுகாவல் நிறுவனத்தின் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தது.