சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (எஸ்ஜிஎச்) பெயர் மற்றும் முத்திரைகளுடன் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போலி கடிதங்களை சிங்கப்பூர் பொது மருத்துவமனை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இவற்றை தான் அனுப்பவில்லை என்று கூறியுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வேலைநியமன அலுவலகமோ முகவரோ தனக்கு இல்லை என்று மருத்துவமனை விளக்கி உள்ளது.
போலி கடிதங்களில் அதிகாரபூர்வ கையெழுத்து எதுவுமில்லை.
ஊட்ரம் ரோட்டில் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை புக்கிட் மேராவில் இருப்பதாக போலி கடிதங்களில் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் தென்னிந்திய உதவி சமையற்காரர் வேலை இருப்பதாகவும் அதற்கு $1,650 சம்பளம் என்றும் சில கடிதங்களில் உள்ளன. மேலும் சில கடிதங்களில் நிர்வாகத் துறை மேலாளர் வேலை நியமனம் பற்றி விவரித்ததுடன் $1,700 சம்பளம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த இரு வேலைகளும் இம்மாதத்திலேயே தொடங்குவதாக அந்தக் கடிதங்களைப் பெறுவோருக்குச் சொல்லப்பட்டு உள்ளது.
உதவி சமையற்காரருக்கு மிகைநேர ஊதியமாக மணிக்கு $18 வழங்கப்படும் எனவும் அதில் சேருவோர் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் போலி கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலாளர் பதவியில் சேருவோர் ஆறு மாத வேலைத்திறன் சோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. கடிதங்
களின் ஆங்கில வார்த்தைகள் இலக்கண, எழுத்துப் பிழைகளுடன் உள்ளன.