ஹாங்காங் டிபிஎஸ் வங்கி தீச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை

சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கியின் ஹாங்காங் கிளை தீ விபத்தால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அது குறித்த தகவல்களை டிபிஎஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

“ஹாங்காங் டிபிஎஸ் வங்கிக்கு அருகில் உள்ள கட்டடத்தில்தான் தீப்பற்றியது. நல்லவேளையாக வங்கி பாதிக்கப்படவில்லை,” என்றார் அவர்.

கட்டடத்திற்கு ஒரு சேதமும் இல்லை என்றும் ஊழியர்கள் அத்தனை பேரும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தீச்சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில் டிபிஎஸ் வங்கி பாதிக்கப்பட்டதுபோல பலரும் கருதினர்.

டிபிஎஸ் வங்கிக்கு அடுத்துள்ள கட்டடத்தில் தீ மளமளவென எரிவதும் அந்தக் கட்டடத்தின் முன்பு ஏராளமானோர் திரண்டிருப்பதும் காணொளியில் தெரிந்தன.

தீயணைப்பு வாகனம் வந்து சேருவதும் ஆடவர் ஒருவர் வாளி தண்ணீரால் தீயை அணைக்க முயன்றதும் அதில் தெரிந்தன.

ஹாங்காங்கில் பல மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறைக்கு இடையே இந்த காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!