லசால் கலைக் கல்லூரியின் 12 மாடிக் கட்டடத்துக்கு தனியொரு அமைப்பு ஐம்பது மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டில் புதிய 12 மாடி கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் லசால் கலைக் கல்லூரியின் மாணவர்கள் தங்களுடைய வகுப்புகளுக்காக பல்வேறு வளாகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்காது.
மெக்னல்லி சாலையில் தற்போது செயல்படும் கல்லூரிக்கு அருகே 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் 12 மாடி வளாகம் கட்டப்படும்.
ரோச்சோர் எம்ஆர்டி நிலையத்துடனும் அது இணைக்கப்படும்.
லசால் கலைக் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருவதால் அதனைச் சமாளிக்க அண்மைய ஆண்டுகளாக வின்ஸ்டெட் ரோட்டில் உள்ள கலைகளுக்கான வசதிகளை அது குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது.
அருகில் உள்ள கட்டடங்களையும் அது வகுப்பறைகளாக மாற்றி பயன்படுத்துகிறது.
ஆரம்பத்தில் 1,850 மாணவர்களை இலக்காகக் கொண்டு மெக்னல்லி வளாகம் கட்டப்பட்டது.
ஆனால் தற்போது மாணவர் களின் எண்ணிக்கை 2,700ஐத் தாண்டியுள்ளது. பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன்பு மெக்னல்லி சாலையில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்துக்கு லசால் கல்லூரி இடம் மாறியது.
ஆனால் போதுமான நிதி வசதி இல்லாததால் புதிய வளாகத்தைக் கட்டும் பணி ஒத்தி போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நீ ஆன் கொங்ஸி, ஐம்பது மில்லியன் வெள்ளி நிதி வழங்க உறுதி தெரிவித்தது.
இது, லசால் கலைக் கல்லூரிக்குக் கிடைத்த மாபெரும் நன்கொடையாகும். இதற்கிடையே நேற்று பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இது, நாட்டின் எதிர்காலத்துக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பு என்று குறிப்பிட்டார். கலைக் கல்லூரி களுக்கு மில்லியன் கணக்கான வெள்ளியை தியோச்சூ குலவழிச் சங்கம் நன் கொடையாக வழங்குவதை சுட்டிக் காட்டிய அவர், “சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூரர் என்ற நிலையை எட்டும் பயணத்தில் இத்தகைய ஒத்துழைப்பு சான்றாக விளங்குகிறது,” என்றார். லசால் மெக்னல்லி வளாகத்தில் நேற்று நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச் சருமான திரு ஹெங் பங்கேற்றுப் பேசினார்.