கட்டுப்படுத்த முடியாத ‘டைப் 2’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் உதவி கிடைக்கவுள்ளது. சிங்கப்பூரில் நேற்று அறிமுகப் படுத்தப்பட்ட புதிய மருந்து அவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நீரிழிவு நாளையொட்டி சிங்கப்பூரின் பொது, தனியார் மருத்துவமனைகளில் ‘Soliqua’ எனும் அந்து ஊசி மருந்து நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இரு வகை நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் ‘Insulin glargine’, “Lixisenatide’ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் சாப்பிடாமல் இருக்கும்போதும் உணவுக்குப் பிறகும் ரத்தத்தில் இனிப்பின் அளவைக் குறைக்க இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
நியூபேப்பரிடம் பேசிய ஃபேரர் பார்க் மருத்துவமனையின் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் மாத்யூ டான், நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் ‘metformin’ போன்ற மாத்திரை களுக்கு மாற்றாக இந்த உயர் தர மருந்து இருக்கிறது என்றார்.
மவுண்ட் எலிசபெத் நொவினா நிபுணத்துவ மருத்துவ நிலையத்தின் ஆர்டென் மருந்தகத்தின் மருத்துவ ரான டாக்டர் பென் இங், ‘Soliqua’ விரைவாகவும் வலுவாக வும் செயல்படக்கூடியது என்றார்.
“ஒரே ஒரு முறை இந்த ஊசி மருந்தை எடுத்துக் கொண்டால் இரண்டு அல்லது மூன்று நாட் களில் ரத்தத்தில் உள்ள இனிப்பு குறையும்.
“நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவில் இனிப்பை வைத்திருக்க புதிய மருந்தின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்,” என்றார் அவர்.
“நீரிழிவு நோயால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அந்நோய்க்கு எதிரான போரில் உடனடியாக வெற்றி காண முடியாது. ஆனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவினால் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும். மேலும் பக்கவாதம், சிறுநீரகம் செயலிழத்தல், இதய நோய் போன்ற ஆபத்துகளிலிருந்து நீரிழிவு நோயாளிகளை பாதுகாக்க முடியும்,” என்று டாக்டர் பென் இங் மேலும் தெரிவித்தார்.