சிங்டெல் அதிகாரிபோல நடித்து $300,000 மோசடி

தனது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பு வந்தபோது 65 வயது திருவாட்டி லீயிடம் தான் சிங்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி என்றும் அவரது அகண்ட அலைவரிசை இணைப்பு குறித்து தாம் அழைப்பதாகவும் கூறினார்.

தாம் கூறும் வழிகாட்டிகளைப் பின்பற்றினால், அவரது ‘வைஃபை’யை சரி செய்து விடலாம் என்றும் அந்த நபர் கூறியதை திருவாட்டி லீ நம்பினார்.

தனது கணினியின் முன் அந்த மாது இரண்டு மணி நேரம் அமர்ந்திருக்க அந்த நபர் வழி காட்டிகளைக் கூறினார்.

சிங்கப்பூரர்போல பேசாத அந்த நபர் கணினியின் இயக்கத்தைத் தாம் பயன்படுத்த அனுமதிக் குமாறு அந்நபர் கேட்க திருவாட்டி லீ அனுமதித்து, தனது தனிப்பட்ட விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

திருவாட்டி லீயின் கணினி இணைப்பில் கோளாறு ஏற்பட்டு உள்ளது என்று கூறிய அந்நபர், அம்மூதாட்டியை இணைய போலி சுடன் இணைப்பதாகக் கூறினார்.

அந்த இணைப்பு மற்றொரு இணைய மோசடி பேர்வழியிடம் சென்றது. அவரது இணைய விவரங்கள் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்று பொய் கூறி மூதாட்டியை அவர் நம்ப வைத்தார்.

பின்னர் திருவாட்டி லீயின் வெவ்வேறு வங்கிக் கணக்கு களிலிருந்து மொத்தம் 300,000 வெள்ளியை அவர்கள் களவாடினர். அந்தத் தொகையிலிருந்து எந்தப் பணமும் திரும்ப கிடைக்க வில்லை.

“அவர்கள் கூறியதை நான் முழுமையாக நம்பி விட்டேன். கணினி இணைப்பை சரி செய்யும் வரை யாரிடம் பேசக்கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள்,” என்றும் திருவாட்டி லீ மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!