நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, சுமார் 1,000 உணவு விநியோக ஓட்டுநர்கள் தங்களது மின்-ஸ்கூட்டர்களைத் திருப்பிக் கொடுக்க பதிவுசெய்துள்ளனர்.
அரசாங்கமும் உணவு விநியோக நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள $7 மில்லியன் நிதியிலிருந்து பயன்பெறும் நோக்கில் அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தங்களது மின்-ஸ்கூட்டர்களைக் கொடுத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக மின்சார மிதிவண்டிகள், மிதிவண்டிகள் போன்றவற்றை வாங்க விரும்பும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
சுமார் 7,000 உணவு விநியோகிப்பாளர்களைக் கொண்டிருக்கும் கிராப், தங்களது 20 விழுக்காட்டு மின்-ஸ்கூட்டர் உணவு விநியோகிப்பாளர்கள் இந்தத் திட்டத்துக்குப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டது.
சுமார் 960 மின்-ஸ்கூட்டர் உணவு விநியோகிப்பாளர்களைக் கொண்டிருக்கும் ஃபூட்பாண்டா, தமது விநியோகிப்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டது.
நேற்று தொடங்கிய இந்தப் பதிவில் டெலிவாரூ விநியோகிப்பாளர்களும் பதிவு செய்துள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity