சொகுசு கப்பல் பயணிகள், சிப்பந்திகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

தாய்லாந்திலிருந்து வியட்னாமுக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அக்கப்பல் சிங்கப்பூரில் நங்கூரமிட்டுள்ளது.

கப்பலில் உள்ள பயணிகளில் 229 பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

இந்தத் தகவல்களை சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம், சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் உணவு முகவை ஆகியவை அறிக்கை மூலம் வெளியிட்டன.

தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து வியட்னாமின் ஹோ சி மின் நகருக்குச் சென்றுகொண்டிருந்த எம்வி சன் பிரின்செஸ் சொகுசு கப்பல் கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் சிங்கப்பூரில் நங்கூரமிட்டது.

நோயால் பாதிக்கப்பட்டிருந்த பயணிகளில் 189 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருப்போரில் 16 பேர் சிங்கப்பூரில் தரையிறங்கி தங்கள் கப்பல் பயணத்தை முடித்துக்கொண்டனர்.

பயணிகள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களை சிங்கப்பூரில் இறக்கிவிடவில்லை என்றும் குணமடைந்த பயணிகளில் பலர் சிங்கப்பூரில் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!