பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் ஆடவர் கைது

பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் 43 வயது ஆடவர் ஒருவர் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியில் நேற்று (நவம்பர் 20) கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து வாசகர் ஜெரி ஸ்டோம்புக்கு தாகவல் அளித்தார். ஆடவர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தையும் அது தொடர்பான காணொளியையும் அவர் அனுப்பிவைத்திருந்தார்.

கையில் பதாகைகளைப் பிடித்திருந்த அவர் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவற்றில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அந்த ஆடவரைச் சூழ்ந்த பலர் புகைப்படம், காணொளி எடுத்ததாக ஜெரி தெரிவித்தார்.

“திரைப்படக் காட்சிபோல அந்த ஆடவரின் கைகளில் விலங்கிட்டு போலிசார் கைது செய்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மாலை 5 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் 43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!