14 வயது சிறுமிக்கு போதைப் பொருள் விற்ற சிறுவன்

பதினான்கு வயது சிறுமிக்கு போதைப்பொருள் விற்ற 15 வயது சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்ற அந்தச் சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவனுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொள்பவர் என்று சந்தேகிக்கப்படும் அந்தச் சிறுமியும் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய நான்கு நாள் அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 70 சந்தேக பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று நிறைவடைந்தது. அதிரடி நடவடிக்கையின்போது $71,000 பெறுமானமுள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிடோக், சுவா சூ காங், தெம்பனிஸ், தெலுக் பிளாங்கா, ஈசூன் உட்பட பல வட்டாரங்களில் இந்த அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!