2017ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இடிந்து விழுந்த தீவு விரைவுச்சாலை (பிஐஇ) மேம்பாலத்தைக் கட்டுவதற்கான திட்டப்பணிகளைத் தயாரித்த பொறியாளருக்கு 86 வாரங்கள் சிறை தண்டனையும் $10,000 அபராதமும் இன்று (டிசம்பர் 2) விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், இந்தோனீசியாவைச் சேர்ந்த 46 வயது திரு ரொபர்ட் அரியாந்தோ யான்ந்தரா குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆபத்து விளைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்ததைத் தமது தீர்ப்பை வழங்கும்போது சுட்டினார் துணைத் தலைமை நீதிபதி ஜனிஃபர் மெரி.
‘சிபிஜி கொண்சல்ட்டனஸ்’ நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்டிருந்த திரு ரொபர்ட், தமது பணிக் குழுவின் பொறியாளர்கள் மேம்பாலங்கள் உருவாக்குவதில் தேவையான அனுபவம் பெறாதவர்கள் என்று அறிந்தும், அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலும் உத்தரவுகளும் வழங்க தவறினார்.
மேம்பாலத்தின் சில அம்சங்களின் வடிவமைப்புகளையும் சோதிக்க தவறினார் திரு ரொபர்ட்.
அதோடு தமது பொறியார்கள் செய்தத் தவறான கணக்குகளை அறிந்தும், தக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்துவிட்டார் அவர்.
இந்த அலட்சியத்தால் 31 வயது சீன ஊழியரான திரு சன் யின்சுவான் இறந்தது உட்பட மேலும் 10 ஊழியர்கள் காயமடைந்தனர்.