சிங்கப்பூர் ஊடகத் துறை மேலும் மேம்பட புத்தாக்கம் மட்டுமல்லாமல் தொழில்நுட்பத் திறனாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை விநியோகித்து உலக முழுவதும் உள்ள வாசகர்களை ஈர்க்க தொழில்நுட்ப ஆற்றல் அவசியம்,” என்றார் அவர்.
இத்தகைய திறனாளர்களை உருவாக்க அரசாங்கமும் தொழிற்துறையினரும் சேர்ந்து செயல்படலாம் என்று அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
முதன்முறையாக நடைபெறும் அனைத்துலக ஊடக ஆலோசனை மன்றத்தில் நேற்று முன்தினம் திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
இந்த வட்டாரத்தின் தலைசிறந்த ஊடகத்துறை தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் ஊடகத் துறையின் போக்குகள் குறித்த கலந்துரையாடலை வழிநடத்தினர்.
தற்போது நடைபெற்றுவரும் சிங்கப்பூர் ஊடக விழாவில் இது அங்கம் வகிக்கிறது.