$43,000 மதிப்புள்ள போதைப் பொருள்; சிங்கப்பூர் ஆடவர் கைது

சுமார் 43,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 38 வயது சிங்கப்பூர் ஆடவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 385 கிராம் ஐஸ் உட்பட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து வெளியிட்ட தகவலில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5க்கு அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

டெக் வை அெவன்யூ கார்ப்பேட்டையில் மற்றொருவரை சந்தித்தபோது அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் மலேசியரான அந்த மற்றொரு நபர், பின்னர் உட்லண்ட்ஸ் சர்க்கிள் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் ஆடவரிடமிருந்து 385 கிராம் ஐஸ், 32 கிராம் அபின், 100 எக்ஸ்டசி மாத்திரைகள், 50 எரிமின்-5 மாத்திரைகள், சிறிய அளவிலான கஞ்சா ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆடவரிடமிருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய ஆடவர் 5,300 வெள்ளி ரொக்கத்துடன் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!