காரை ஓட்டும்போது கண்ணயர்ந்த ஓட்டுநருக்கு $7,000 அபராதம்; வாகனம் ஓட்ட தடை

தனது மனைவி, 10 மாதக் குழந்தை ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோதும் காரை ஓட்டிச் சென்ற ஆடவர் சற்று கண்ணயர்ந்ததால் அவரது கார் இடதுபக்கமாகச் சென்று அங்கிருந்த நடைபாதை மேல் சென்றது.

அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த திரு ஹசிதா பிரசாத் எனும் 37 வயது ஆடவர் மீது மோதிய கார் பின்னர் நின்றது. கார் நின்றதும் கண்விழித்தார் ஓட்டுநர்.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த 10 மாதக் குழந்தையின் மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் உடல் நலம் தேறியது.

ஓட்டுநரின் மனைவிக்கு நெற்றியிலும் இடது கன்னத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது.

திரு ஹசிதா பிரசாத்துக்கு கைகால்களில் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மதம் ஏழாம் தேதி இரவு 11.45 மணியளவில் கம்போங் பாரு சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

காரை ஓட்டிச்சென்ற 27 வயது ஆடவருக்கு $7,000 அபராதமும் அனைத்து வாகன வகைகளை ஓட்ட ஈராண்டுத் தடையும் நேற்று விதிக்கப்பட்டன.

சம்பவம் நடந்த நாளன்று ஓட்டுநருக்கு உடல்நலம் சரியில்லை என்று அவரின் வழக்கறிஞர் கூறினார். வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டியதற்காக ஈராண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!