வெளிநாட்டவர் இம்மாதம் 9ஆம் தேதி முதல் தாங்கள் வைத்திருக் கும் சிங்கப்பூர் வாகனமோட்டும் உரிமங்களை இணையம் வழி புதுப்பிக்கவோ மாற்றிக்கொள்ளவோ முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இச்சேவையை சிங்கப் பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசி களும் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும்.
வரும் திங்கட்கிழமை முதல் வெளிநாட்டவர் சிங்கப்பூர் போலிஸ் படையில் www.police.gov.sg/e-services எனும் இணையவாசல் மூலமாகவோ அல்லது Police@SG கைபேசிச் செயலி மூலமாகவோ தங்கள் சிங்கப்பூர் வாகனமோட் டும் உரிமத்தைப் புதுப்பித்துகொள் ளலாம் மற்றும் மாற்றிக்கொள்ள லாம் என்று போலிஸ் தெரிவித் தது.
இதற்கு அவர்களின் சிங்பாஸ் கணக்குத் தேவைப்படும் என்று குறிப்பிட்ட போலிஸ், சிங்பாஸ் கணக்கு இல்லாதவர்கள் தங்கள் வெளிநாட்டினர் அடையாள அட்டை எண்ணையும் பிறந்த தேதியையும் பயன்படுத்திகொள்ளலாம் என்றும் விளக்கியது.
வாகனமோட்டும் உரிமங்க
ளைப் புதுப்பிக்கவோ, மாற்றிக்கொள்ளவோ விரும்பும் விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்களை முகப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வெளிநாட்டு வாகனமோட்டும் உரிமங்களை சிங்கப்பூர் தகுதி
பெற்ற வாகனமோட்டும் உரிமங் களுக்கு மாற்றிக்கொள்வோரின் விண்ணப்பங்கள் மட்டும் முகப்பு களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
தங்கள் வெளிநாட்டு வாகன மோட்டும் உரிமங்களை சிங்கப்பூர் உரிமங்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்புவோர் அதை போக்குவரத்து போலிஸ் தலைமையகத்தில் மட்டுமே செய்துகொள்ளலாம்.
வெளிநாட்டு வாகனமோட்டும் உரிமத்தின் கால அளவையும் இதர தேவையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும் அவர்கள் போக்கு வரத்து போலிஸ் தலைமையகத் துக்குச் செல்ல வேண்டும் என்று விவரிக்கப்பட்டது.
விண்ணப்பம் ஏற்றுக்கொள் ளப்பட்டால் அவர்களின் புதிய அல்லது மாற்று உரிமத்தை ஏழு அலுவலக நாட்களுக்குள் அஞ்சல் வழி பெற்றுக்கொள்ளலாம்.
இணைய வசதி இல்லாதவர் கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து போலிஸ் தலைமை யகத்தில் உள்ள சுய-உதவி இயந்திரம் வழி விண்ணப்பிக்க லாம்.
விண்ணப்பிப்பவர்களுக்கு உதவுவதற்கு சுய-உதவி இயந்தி
ரங்களுக்கு அருகில் அதிகாரிகள் இருப்பார்கள்.
இதன் தொடர்பில் மேல் விவ ரம் தேவைப்படுவோர் www.police.gov.sg எனும் இணையப் பக்கத்தை நாடலாம் என்றும் போலிஸ் அறிக் கையில் கூறப்பட்டது.