ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்

உள்ளூர் படப்பிடிப்புக்காக நாளை (டிசம்பர் 8) ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை சாலை தடங்கள் மூடப்பட்டிருக்கும்.

‘ரோல்லா’ எனப்படும் உள்ளூர் காணொளி தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை மேற்கொள்ள இந்த ஏற்பாடு வகை செய்யும்.

இணைய காணொளி ஒன்றை எடுப்பதற்காக ராபின்சன் சாலையில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

சாலை தடங்கள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் போலிஸ், அவசர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். வாகனமோட்டிகளுக்கு வழிகாட்ட துணை போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.

அந்தப் பகுதியில் கார் நிறுத்தி வைக்கப்படுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறிய போலிஸ், இடையூறு விளைவிக்கும் விதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அவை அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் என்று சொன்னது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!