சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் பிரியமுள்ள பனிக்கரடியாக வலம் வந்து பார்ப்போர் அனைவரையும் மகிழ்வித்து கடந்த ஆண்டு மாண்ட இனுக்காவைப் பற்றிய புத்தகம் இவ்வாண்டின் குழந்தைகளுக்கான ஆகப் பிரபலமான ஆங்கிலப் புத்தகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்துருவம், வடதுருவம் ஆகிய குளிர் பிரதேசங்களில் இல்லாது, இனுக்கா வெப்பமண்டலத்தில் பிறந்த முதல் பனிக்கரடியாகும்.
“அதைப் பற்றிய பசுமையான நினைவுகளை ‘தி ஒன் அண்ட் ஓன்லி இனுக்கா’ புத்தகம் கொண்டிருக்கிறது,” என்று வருடாந்திர பாப்பியுலர் வாசகர்களின் தேர்வு விருதுகளின் முடிவுகளை நேற்று முன்தினம் அறிவித்த பாப்பியூலர் புத்தகக்கடை கூறியது.
அந்தப் புத்தகத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ஜான் புனைந்துள்ளார். நூலை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் அச்சடித்தது.
நூல் வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நடைபெற்றது.