சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே சட்டத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈராண்டுக்கு ஒரு முறை இருதரப்புக்கும் இடையே துணை அமைச்சர் நிலையிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். உலகளாவிய சட்ட கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சீனாவின் குவாங்ேஷாவுக்குச் சென்றுள்ள சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், சீனாவுடனான சட்டத்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டார். சீனாவின் சார்பில் அந்நாட்டின் நீதித் துறை அமைச்சர் ஃபூயு ஷெங்ஹுவா உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
ஒத்துழைப்புக்கான புதிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ள சட்டத் துறையில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்பட்டு வரும் வேளையில் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது. சட்ட அம்சங்களை வலுப்படுத்துதல், அனைத்துலக வர்த்தகப் பூசலுக்குத் தீர்வு காணுதல், சட்ட நடவடிக்கைகளை நிர்வகிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய ஒத்துழைப்பு உடன்பாட்டில் சிங்கப்பூரும் சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. கருத்தரங்கின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் சண்முகம், சீனாவின் முயற்சியில் இடம்ெபற்றுள்ள வர்த்தகப் பாதை பெருந்திட்டம் உட்பட சிங்கப்பூரும் சீனாவும் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தி வருவதாகத் ெதரிவித்தார்.
“கிரேட்டர் பே ஏரியா மேம்பாடு, வர்த்தகப் பாதை பெருந்திட்டம் போன்றவை மூலமாக அதிகமான சீன நிறுவனங்கள் அனைத்துலக அளவில் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டுத் திட்டங்களில் அவை முதலீடு செய்து வருகின்றன. சட்ட, சமரசத் துறையும் வளர்ச்சி அடையும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளை அவர்கள் நமக்கு வழங்குகின்றன,” என்று அமைச்சர் சண்முகம் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் சண்முகம் ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு வியாழன் அன்று சீனா சென்றார்.
ஞாயிறு அன்று மற்றொரு பயி லரங்கில் அவர் கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை அன்று பெய்ஜிங்கில் அவர் அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது சட்ட அமலாக்கம், குடிமைத் தற்காப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மறுவுறுதி செய்யப் பட்டது.
சீனாவில் பொது பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்திப்பதோடு அமைச்சர் சண்முகத்தின் பயணம் நிறைவு பெறுகிறது.