ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சண்டை; கைகலப்பில் ஈடுபட்ட இருவர் கைது

ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் சுமார் பத்து பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணியளவில் சண்டை மூண்டது. சண்டைக்கான காரணம் தெரிய வில்லை. ஆனால் அவர்கள் காலால் எட்டி உைதத்தும் கையால் குத்தியும் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் கைகலப்பில் ஈடுபட்ட தற்காக இருவரைக் கைது செய்த னர். ஒருவருக்கு வயது 43, மற் றொருவருக்கு வயது 55 என்றும் இருவருக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப் செயலியில் பரவிய 15 வினாடி காணொளியில் அமெரிக்க விரைவு உணவகமான ‘ஏ அண்ட் டபிள்யு’ முன்பு சிலர் கை கலப்பில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

அவர்களில் சிலர் தரையில் விழுந்து கிடந்த ஒரு நபரை காலால் எட்டி உதைத்தனர். சிலர் அவரை கையால் குத்த முயற்சி செய்தனர்.

கைகலப்பு சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!