அண்மை மாதங்களில் வேலையிட விபத்துகளும் மரணங்களும் அதிகரித்திருக்கும் வேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மனிதவள அமைச்சு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை சுமார் 400 வேலையிடப் பாது காப்புச் சோதனைகளை நடத்த முடிவெடுத்துள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வேலையிடங்களில் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்
துக்கு வருகை அளித்தார் .
அவருடன் தொழில் பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவின் பாதுகாப்பு அதி காரிகளும் வந்திருந்து கட்டுமானத் தளத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புச் சோதனைகளை மேற் கொண்டனர்.
கட்டுமான வேலைகளைத் தொடங்குவதற்கு முன் ஊழியர் களுக்குப் பாதுகாப்பு விளக்கவுரை நடத்தப்படுவதை, ஊழியர்களுக் குப் போதிய பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கப்பட்டிருப்பதை, கட்டுமானப் பொருட்கள் முறையாக வைக்கப்பட்டிருப்பதை அமைச்சர் பார்வையிட்டார்.