அல்ஜுனிட் - ஹவ்காங் நகர மன்றத்தின் நிதி விவகாரங்களில் திருவாட்டி சில்வியா லிம்மும் திரு லோ தியா கியாங் கும் தொடர்ந்து ஈடுபடுவது குறித்து விளக்கமளிக்குமாறு அந்த நகர மன்றத்தின் தலைவர் திரு ஃபைசல் மனாப்பை தேசிய வளர்ச்சி அமைச்சு கேட்டுக்கொண்டிருந்தது.
அதன் தொடர்பில் திரு ஃபைசலிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது என்றும் அதை தான் பரிசீலித்து வருவ தாகவும் அமைச்சின் பேச்சாளர் நேற்று முன்தினம் தெரி வித்தார்.
நகர மன்றத்தின் நிதி விவகாரங்களில் திருவாட்டி லிம், திரு லோ இருவரும் ஏன் விலகியிருக்கவில்லை என்றும் பாட்டாளிக் கட்சி நடத்தும் நகர மன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் கேட்கப்பட்டது. இதற் கான பதிலை இம்மாதம் 13ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என நகர மன்றம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் அனைத்து நிதி விவகாரங்களிலிருந்தும் திருவாட்டி லிம்மும் திரு லோவும் விலகியிருக்க வேண்டும் என்று கடந்த மாதம் நாடாளுமன் றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்டாளிக் கட்சியின் இந்த இரு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டதாக கடந்த அக்டோபர் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் இருவரும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர்.
அண்மையில், இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம், திருவாட்டி லிம்மும் திரு லோவும் நகர மன்றத்தில் அனைத்து நிதி விவகாரங் களிலிருந்தும் விலகியிருக்க தேவையில்லை என்று கூறியது.
சமீபத்தில் நடத்தப்பட்ட நகர மன்றத்தின் காலாண்டு கூட்டத்தில் அவர்கள் இருவரும் நிதி விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபடுவது குறித்த வாக்கெடுப்பில் உறுப்பி னர்கள் 17க்கு 1 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்க ளித்து ஆதரவு தெரிவித்தனர் என்றும் மன்றம் கூறியது.