வடக்கு-தெற்கு வழிச்சாலை: கடைசி உடன்பாடு வழங்கீடு

வடக்கு-தெற்கு வழிச்சாலைக்கான மொத்த $954.1 மில்லியன் மதிப்புள்ள மூன்று உடன்பாடுகளில் கடைசிக்கட்ட உடன்பாட்டை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கி இருக்கிறது.

வடக்கு-தெற்கு வழிச்சாலையை அமைப்பதற்கான 14 கட்டுமான உடன்பாடுகளும் கொடுக்கப்பட்டுவிட்டன. நேற்று அறிவிக்கப்பட்ட உடன்பாடு $365.9 மில்லியன் மதிப்புள்ளது.

சுங்கை சிலேத்தாருக்கும் ஈசூன் அவென்யூ 5க்கும் இடையில் அமையவிருக்கும் 3.1 கி.மீ. மேம்பாலச்சாலைப் பகுதியை வடிவமைத்துக் கட்டுவதற்காக அந்த உடன்பாடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதை மூன்று நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு பெற்று உள்ளது.

அந்த நிறுவனங்களில் ஒன்றான சைனா ரயில்வே 11 என்ற நிறுவனத்திற்கு அண்மையில் தெங்கா பணிமனையைக் கட்டுவதற்கான உடன்பாடு கிடைத்தது. அதோடு, ஜூரோங் வட்டார வழித்தடத்தில் இரண்டு நிலையங்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

வடக்கு-தெற்கு வழிச்சாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது குத்தகைகளின் மதிப்பு மொத்தம் $582.2 மில்லியன். இது ஈசூன் அவென்யூ 5க்கும் அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டுக்கும் இடையில் 4.5 கி.மீ. நீள மேம்பாலச் சாலையை வடிவமைத்துக் கட்டுவதற்கு உரியதாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!