இரண்டு பெண் பயணிகளை மானபங்கம் செய்த முன்னாள் 'கிராப்ஹிட்ச்' ஓட்டுநருக்கு சிறை

பகுதி நேர கிராப்ஹிட்ச் வாகன ஓட்டுநர் ஒருவர் ஒரே நாளில் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்ட இரண்டு பெண் பயணிகளை மானபங்கம் செய்தார்.

இதற்காக அவருக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டான் கெங் லெங், 39, என்ற அந்த ஆடவர் மானபங்கம் செய்த பெண்கள் 24 மற்றும் 46 வயதுள்ளவர்கள்.

டானின் வாகனத்தின் பின்னிருக்கையில் நிறைய பொருட்கள் இருந்ததால் அந்த இரண்டு பேரும் அவருடைய வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்தபோது அவர்களைத் தொடக்கூடாத இடங்களில் தொட்டு டான் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார்.

இதர இரண்டு குற்றச் சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த இரண்டு பெண்களும் சென்ற ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்குள்ளாக மானபங்கம் செய்யப்பட்டதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!